திருவாதவூர் திருமறைநாதர் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மே 2025 03:05
மேலூர்; திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றம் நடந்தது. முன்பாக சுவாமிகள் பல்லக்கில் கோயிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பிறகு சுவாமிகள் முன்பு கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் கிருஷ்ணன், அறங்காவலர் செல்லையா, பேஷ்கார் ஜெயபிரகாஷ் செய்திருந்தனர்.