திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி காட்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூன் 2025 04:06
காரைக்கால்; திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்ச விழாவை முன்னிட்டு தெப்போற்சவம் நடந்தது.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 23ம் தேதி துவங்கியது. தினம் விநாயகர், சுப்ரமணியர்,அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உற்சவம் வீதியுலா மற்றும் செண்பகத்தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளல் நடந்தது.அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்தி விதியுலா, தேர்திருவிழா, தங்க காக வாகன வீதியுலா நடந்தது.நேற்று ழதெப்போற்சவம் நடைபெற்றது. இன்று பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி, விசாக தீர்த்தம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.