Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் வைகாசி விசாக தேரோட்டம்; ... மயிலம் முருகர் கோவிலில் வைகாசி விசாகத்  திருவிழா மயிலம் முருகர் கோவிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2025
05:06

சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடந்தது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக தினமும் சுவாமி வீதி உலா நடந்தது. ஜூன் 5 ல் திருக்கல்யாணம், 6 ல் கழுவன் திருவிழா நடந்தது. 9ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 9:30 மணிக்கு பூரணை, புட்கலை தேவியருடன் சேவுகப்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் தேரில் ஏறி சுவாமியை வழிபட்டனர். மாலை 3:30 மணிக்கு சந்திவீரன் கூடத்தில் இருந்து நாட்டார்கள் ஊர்வலமாக கோயிலுக்கு வந்து, மாலை 3:50 மணிக்கு தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. 4:30 மணிக்கு வட மேற்கு திசையில் உள்ள கழுவன் கழுவச்சி சிலைகள் மீது பாரம்பரிய முறைப்படி தேர் சக்கரம் ஏறியது. இதைத் தொடர்ந்து 5:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. அப்போது பக்தர்கள் ஏராளமான தேங்காய்களை தேரடிப்படியில் வீசி எறிந்து உடைத்தனர். தொடர்ந்து தேரடி பூஜை நடந்தது. தேரோட்டத்தையொட்டி காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. நான்கு ரத வீதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தது. சிவகங்கை எஸ்.பி., தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். திருவிழாவின் பத்தாம் நாளான நாளை இரவு பூப்பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள ஸ்ரீ சங்கர மடத்தில் காஞ்சி மடாதிபதிகள் ஆசியுடன் ஸ்ரீவித்யா ஹோமம் ... மேலும்
 
temple news
புதுடில்லி: பிரதமர் மோடியை, பகவான் ஸ்ரீ சத்யசாய்பாபா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரத்னாகர் ... மேலும்
 
temple news
கூடலூர்; மேல்கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு வெற்றிலை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயிஅம்மன் கோயிலில் மூன்றாம் ஆடி வெள்ளியை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மதுரை; அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வேத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar