Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி விசாகம்: திருச்செந்துாரில் ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உச்சி கால பூஜை கட்டளை துவக்க விழா அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நோய் தீர்க்கும் மருந்து.. கருணைக்கடல் காஞ்சி மகாபெரியவர் ஜெயந்தி.. இன்று..!
எழுத்தின் அளவு:
நோய் தீர்க்கும் மருந்து.. கருணைக்கடல் காஞ்சி மகாபெரியவர் ஜெயந்தி.. இன்று..!

பதிவு செய்த நாள்

10 ஜூன்
2025
11:06

எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி மகாபெரியவர். எதிர்பார்ப்பு இல்லாத பக்தி, மனத்துாய்மை, எளிமை, ஒழுக்கம், நேர்மை இவையே ஆன்மிக வாழ்வின் அடிப்படை என்பது இவரது கோட்பாடு. எளிய மனிதரான இவர் பெரும்பாலும் தென்னங்கீற்று வேய்ந்த குடிசையில் தங்கினார். நாடு முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்தார். சமகாலத்தில் வாழ்ந்த  துறவியர் மீது  மதிப்பு கொண்டிருந்தார். 


காஞ்சி மகாபெரியவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார். பத்து வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர். நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர். சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர். காஞ்சி மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு ஆண்டு முன்பாக உடல் தளர்ச்சிப் பெற்ற நிலையில் ஒருநாள் மாலையில் தனது சிஷ்யர்களை அழைத்து, தான் சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டுமென்றும் அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் அவருடைய பூஜையில் அணிவிக்கப்படும் குஞ்சிதபாதத்தைத் தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். (குஞ்சிதபாதம் என்பது பல வகை வேர்களால் உருவாக்கப்பட்டு நடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுவது) குஞ்சிபாதத்தை தரிசித்தால் நோய் அகலுவதுடன் மோட்சம் கிடைக்கும்.


இதைக்கேட்ட சிஷ்யர்களுக்குக் கலக்கம். பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக சிதம்பரம் நடராஜருக்குப் பூஜை செய்யும் தீட்சிதர்கள் சிலர் காஞ்சிபுரம் சங்கரமடம் வந்து பெரியவரை தரிசித்துப் பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர். சிஷ்யர்கள் வியப்பின் உச்சிக்கே போய் விட்டனர். மகாபெரியவரிடம் சென்று விபரத்தைக் கூறவும் அவருக்கும் பேரானந்தம். தீட்சிதர்களை அருகில் வருமாறு சைகையால் அழைத்து பிரசாதத் தட்டிலிருந்து குஞ்சித பாதத்தை எடுத்துத் தலையில் வைத்தக்கொண்டார். குஞ்சிதபாதத்துடன் உள்ள மகாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு கோவிலில் இன்று நடந்த பட்டினத்தார் சிவபூஜை  செய்யும் நிகழ்வில் திரளான ... மேலும்
 
temple news
திருமலை; இனிமேல், ஸ்ரீவாரி பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏழுமலையானை தரிசனம் செய்யமுடியும். இந்தப் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை விழா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆக.5ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar