காரைக்கால் ராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2025 03:06
காரைக்கால்; காரைக்கால் ராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது.
காரைக்கால் பெரியபேட் கிராமத்தில் அருள்பாளிக்கும் ஸ்ரீ ராஜேஸ்வரி சீதளாதேவி அம்மன் கோவிலில் 23ம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நேற்று முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. முன்னதாக கஞ்சி வார்த்தல் மற்றும், அம்பாளுக்கு படையல் இட்டு வீதி உலா வந்து மஞ்சள் நீர் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து முளைப்பாரி எடுத்து வந்து அம்பாள் எதிரே வைத்து பெண்கள் பாட்டு பாடி ஆட்டம் ஆடி தலையில் எடுத்துச் சென்றன. கிராமத்தை சுற்றி வந்து கடற்கரையில் கரைத்தனர். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பஞ்சாயத்தார்கள் தலைவர் காந்தரூபன், துணைத் தலைவர் முத்தையன், செயலர் சிவராஜ், பொருளாளர் பிரகாஷ், துணைச் செயலாளர் மணிகண்டன், துணைப் பொருளாளர் அபினேஷ் மற்றும் கிராம ஒருங்கிணைப்பாளர்கள், விழா குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.