Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹா சுவாமிகள் ஜெயந்தி மகோத்சவம் ... சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி, பால்குடம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைக்கண் மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா
எழுத்தின் அளவு:
மைக்கண் மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
01:06

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மைக்கன் மாரியம்மன் மகேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத விழாவில் மஞ்சள் நீராட்டு விழாவும், மறு பூஜையும் நடைபெற்றது.


மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலை சந்தை கடை வளாகத்தில், மிகவும் பழமை வாய்ந்த மைக்கண் மாரியம்மன் மகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 20ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. கம்பம் நடும் விழாவும், பக்தர்கள் அழகு குத்தி ஊர்வலமாக வந்து, அம்மனுக்கு நேர்த்தி கடனை செலுத்தினர். அதைத் தொடர்ந்து சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் இருந்து அம்மன் சுவாமியை அழைத்து வந்தனர். பெண்கள் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படைத்தனர். விழாவில் கம்பத்தை சுற்றி ஆண்கள், பெண்கள், இளைஞர், இளம்பெண்கள் ஆகியோர் தினமும் கம்பத்து ஆட்டம் ஆடினர். விழாவில் மேட்டுப்பாளையம் சிவனடியார் திருக்கூட்டம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில், சிவபாலமுருகன் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார். இந்த விழாவில் மேட்டுப்பாளையம் நந்தவனம் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுகுமார், பொருளாளர் குமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். விழா நிறைவு பூஜையாக காலையில் மஞ்சள் நீராட்டும், மாலையில் அபிஷேக அலங்கார மறுபூஜையும் நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சிவமூர்த்தி, அறங்காவலர்கள் சக்திவேல், பத்மாவதி குமாரசாமி ஆகியோர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூர் விநாயகருக்கு இன்று இரு ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி கோயிலில் திருக்கூடல்மலை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், 48 நாள் நடந்த மண்டல பூஜை, 1,008 கலச அபிஷேகத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar