Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘கோவிந்தா... கோவிந்தா’ கோஷத்துடன் ... மைக்கண் மாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா மைக்கண் மாரியம்மன் கோவிலில் மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா சுவாமிகள் ஜெயந்தி மகோத்சவம் காஞ்சி சங்கரமடத்தில் விமரிசை
எழுத்தின் அளவு:
மஹா சுவாமிகள் ஜெயந்தி மகோத்சவம் காஞ்சி சங்கரமடத்தில் விமரிசை

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2025
12:06

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 68வது மடாதிபதி மஹா சுவாமிகள் என அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 132வது ஜெயந்தி மகோத்சவம், காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நடைபெற்றது. கடந்த 8ம் தேதி துவங்கி, வேதபாராயணம், வித்வத் சதஸ், உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், இசை கச்சேரி உள்ளிட்டவை தினமும் நடந்தது. மூன்று நாட்களிலும், வேதபாராயணம் செய்த 40க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்களுக்கும், கிராம கோவில்களில் பணிபுரியும் சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் உள்ளிட்ட 514 பேருக்கும் சன்மானம் மற்றும் புத்தாடையை மடத்தின் மூத்த மேலாளர்சுந்தரேச அய்யர் வழங்கினார். நேற்று காலை, மஹா ருத்ர ஜபம், ஹோமம் உள்ளிட்டவை நடந்தது. மஹா சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் கலசாபிஷேகமும், மலர் அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது.. மஹா சுவாமிகள் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜெயந்தி மகோத்சவத்தையொட்டி சங்கரா பல்கலை, சார்பில், மருத்துவர் சாய்நாதன் தலைமையில் இலவச பொது மருத்துவ முகாமும், காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி ஜீவானந்தம் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இரவு, தேரோட்டம் நடந்தது. தங்க தேரில், மஹாபெரியவர் விக்ரகத்தை எழுந்தருளச் செய்து ராஜவீதிகளில் பவனி வந்தது. மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் சங்கர மடத்தின் ஸ்ரீகாரியம் சல்லா.விஸ்வநாத சாஸ்திரிகள், மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்; ஸ்ரீ விஸ்வேஸ்வர, வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த் திருவிழா மஹா தரிசனத்தில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, வைகாசி விசாக விழாவில் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது.பழநி, கிழக்கு ரதவீதி, பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; திருச்சி சரக இந்திய தொல்லியல்துறை சார்பில், தஞ்சாவூர் பெரியகோவில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ... மேலும்
 
temple news
திருப்பூர்; திருப்பூர், ஜவஹர் நகர், 5வது வீதியிலுள்ள ஸ்ரீராஜகணபதி கோவிலில், 3ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு ... மேலும்
 
temple news
கோவை; செல்வபுரம் பசுமை நகர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவிலில் மகாபாலகணபதி, பால முருகன், முனியப்பன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar