பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழா; குதிரை வாகனத்தில் பவனி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2025 01:06
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ விழா நடந்தது. பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. கோயிலில் வைகாசி வசந்த விழாவையொட்டி வசந்த மண்டபத்தில் தாயார், பெருமாள் ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தனர். வசந்த மண்டப தீர்த்த தொட்டியில் நேற்று காலை தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் வீதி உலா வந்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு கோயிலை அடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.