வடக்குவாசல் செல்வி அம்மன் கோயிலில் புரவியெடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜூன் 2025 01:06
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் புரவியெடுப்பு திருவிழா நடந்தது. இக்கோயில் வைகாசி புரவியெடுப்புத் திருவிழா ஜூன் 2 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவாக தினமும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. ஜூன் 9ல் புரவி எடுப்பு நடந்தது. அம்மன் கோயிலில் இருந்து கச்சேரி திடலுக்கு புரவிகள் எடுத்துவரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அங்கிருந்து 22 புரவிகள் இலங்கமுடைய ஐயனார் கோயிலுக்கும், 13 புரவிகள் ஆதிசேஷன் அய்யனார் கோயிலுக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. நேற்று எருதுகட்டு விழா நடந்தது. இன்று அம்மன் கோயிலுக்கு திரும்பும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.