கொட்டும் மழையில் நடைபெற்ற குண்டம் விழா; தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2025 01:06
புதுச்சேரி; காட்டேரிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிக்குட்பட்ட காட்டேரிக்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு மகாபாரத போர் நிகழ்வை குறிக்கும் வகையில் 18 நாட்கள் உற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வாக தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்பொழுது மழை பெய்ததால் பக்தர்கள் மழையில் நனைந்தபடியே கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் கிராம மக்கள் செய்து இருந்தனர்.