உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு மாங்கனி அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2025 01:06
திருச்சி; பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு மாம்பழங்களை சாத்தி, மாங்கனி சாறினைக்கொண்டு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
திருச்சி உறையூரில் எழுந்தருளியுள்ள வெக்காளியம்மன் கோவில்மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மக்களின் குறைதீர்க்கும் விதமாக மேற்கூரையின்றி அருள்பாலித்து வரும், இக்கோவிலில் காலநிலைகளுக்கு ஏற்ப அந்தந்த காலங்களில் விளையும் பொருட்களையும், காய், கனிகளையும் இயற்கையை படைத்திட்ட அம்மனுக்கு சாத்திவழிபாடு செய்வது வழக்கம். அதன்படி வசந்தகாலமான தற்போது, வைகாசி கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று இக்காலத்தில் விளைந்த மாம்பழங்களை படைத்துவிட்டு பின்னர் மாம்பழங்களை சாறுபிழிந்து வெக்காளியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். தொடர்ந்து அபிஷேகம் செய்யப்பட்ட மாம்பழச்சாறு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.