Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனி முதல் வெள்ளி; பாலதண்டாயுதபாணி ... கருவறை முன் ‘சிசிடிவி கேமரா பொருத்த கடும் எதிர்ப்பு; அர்த்தநாரீஸ்வரர் கோவில் அர்ச்சகர்கள் போராட்டம் கருவறை முன் ‘சிசிடிவி கேமரா பொருத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னமனூர் மாணிக்கவாசகர் கோவில் ஆனித் திருமஞ்சனம் விழா ஜூன் 22ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
சின்னமனூர் மாணிக்கவாசகர் கோவில் ஆனித் திருமஞ்சனம் விழா ஜூன் 22ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2025
11:06

சின்னமனூர்; சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயிலில் 11 நாட்கள் நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழாவின் துவக்க விழா ஜூன் 22ல் துவங்குகிறது. ஜூலை 2 வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்பர்.


தமிழகத்தில் மாணிக்கவாசகருக்கென தனி கோயில் சின்னமனூரில் மட்டுமே உள்ளது. சின்னமனூரிலிருந்து மார்க்கையன்கோட்டை செல்லும் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன விழா நிகழ்ச்சிகள் ஜூன் 22 முதல் துவங்குகிறது. நிகழ்ச்சியை முன்னிட்டு திரளான சிவனடியார்கள் பங்கு பெறும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவிழா நடைபெறும் 11 நாட்களும் மாலை மூலவர் மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். வீதி உலா வருவார். மாணிக்கவாசகர் இத்திருத்தலத்தில் மூன்று மூலவர்களாக இருப்பது தனிச்சிறப்பாகும். மேலும் தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வரபகவான், பக்தர்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றுவார் என்கின்றனர்.


ஆனி திருமஞ்சன விழாவின் ஒரு பகுதியாக மாணிக்கவாசகர் குரு பூஜை மற்றும், அன்று மாணிக்கவாசகர் சுவாமிகள் வீதி உலா வரும் ஜூன் 30 ல் நடைபெறும். அன்று அன்னதானமும் நடைபெறும். தொடர்ந்து ஜூலை முதல் தேதி ஆனி உத்திரம் மற்றும் நடராசருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். ஜுலை 2 ல் ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெறும். இந்த ஆனித் திருமஞ்சன விழாவில் திரளாக பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா, பரம்பரை அறங்காவலர் திருவாசகம் அண்ணாமலை மற்றும் சிவனடியார்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவில் ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழா லட்சார்ச்சனையுடன் நேற்று விமரிசையாக துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பகவத் ராமானுஜர் தென்னாச்சாரியார் சம்பிரதாய சபை துவக்க விழா மற்றும் எம்பார் ஜீயரின், ஆயிரமாவது ... மேலும்
 
temple news
 மதுரை: ‘குருவாயூர், திருப்பதி கோவில்களில் உள்ளது போல, திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ... மேலும்
 
temple news
கேதார்நாத்; பதினொன்றாவது ஜோதிர்லிங்க தலமான கேதார்நாத் கோவில் சிறப்பு பூஜைகளுக்கு பின், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar