பதிவு செய்த நாள்
27
ஜூன்
2025
11:06
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் இன்று காலை துவங்கியது. பிரம்மச்சாரிகள் வழிபாடு, கஜ பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை வழிபாடு நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் ஜூலை 7ம்தேதி மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதையொட்டி பெருந்திட்ட வளாக பணிகளும், பல்வேறு திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி முடிவடைந்துள்ளது. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்காக ராஜகோபுரத்தின் கீழ் பகுதியில் பூமி பூஜை செய்யப்பட்டு பந்தல்கால் நடப்பட்டது.யாகசாலை பந்தலில் 76 ஓமகுண்டங்கள் அமைக்கப்படுகின்றன. மஹா கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் இன்று காலை துவங்கியது. பிரம்மச்சாரிகள் வழிபாடு, கஜ பூஜை, பூர்ணாகுதி தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 1ம் தேதி மாலையில் யாகசாலை பூஜைகள் தொடங்கி, 7ம் தேதி அதிகாலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்கள், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.