அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூன் 2025 10:06
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆனி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி -பூதேவி சமேதராய் துளசி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.