Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ருத்ரபிரயாகையில் வெள்ளப்பெருக்கு; ... குருவாயூர் கோவில் யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் துவக்கம் குருவாயூர் கோவில் யானைகளுக்கு ஒரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் குடமுழுக்கு விழா துவக்கம்; யானை மீது புனித தீர்த்தம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் குடமுழுக்கு விழா துவக்கம்; யானை மீது புனித தீர்த்தம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2025
01:07

தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் யாகசாலை பூஜைக்கு ஆயிரம் கும்பங்கள் தயார் நிலையில் உள்ளது. யாகசாலையில் வைப்பதற்கு காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், இன்று செண்டை மேளம் முழங்க, யானை மீது அமர்ந்த சிவாச்சார்யார்களால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு ஜூலை 7ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை யாகசாலை பூஜை  தொடங்குகிறது. இந்த யாக சாலை பூஜைக்காக ராஜகோபுரம் அருகே  8000 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு  ஆயிரம் கும்பங்கள் வைத்து யாகசாலையில் பூஜை செய்யப்படுகிறது. இதையொட்டி யாகசாலையில் வைக்கப்படக்கூடிய கும்பக்களுக்கு கலர் நூல் சுற்றி, புனித நீர் நிரப்பி தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் யாகத்திற்க்கு பயன்படுத்தக்கூடிய வசம்பு, திப்பிலி, வெள்ளை மிளகு. ரோஜாமொக்கு, கருங்காலிநறிபயிறு, கடல்பாசி, மரிக்கொழுந்து, கருப்பு எள் .கருஞ்சீரகம், நவ தானியங்கள் மூலிகைகள்  உள்ளிட்டஉள்ளிட்ட 108 வகை பொருட்கள் , ஆப்பிள் ஆரஞ்சு உள்ளிட்ட பல வகைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய தீபாராதனை தட்டு உள்ளிட்ட பூஜை பொருள்கள் பொருள்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மகா கும்பாபிஷேகம் முன்னிட்டு யாகசாலையில் வைப்பதற்கு காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம், இன்று செண்டை மேளம் முழங்க, யானை மீது அமர்ந்த சிவாச்சார்யார்களால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


இந்த யாகசாலை பூஜையில் 100 சிவாச்சாரியார்கள் பூஜையில் ஈடுபடுகின்றனர். இன்று மாலை தொடங்கும் யாகசாலை பூஜை 7 நாட்கள் தினமும் காலை மாலையில் நடைபெறுகிறது. 7ம் தேதி அதிகாலை வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுர விமான கலசங்கள், சுவாமி மூலவர், சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்கபெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar