Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news இலவச ஆன்மிக சுற்றுலாப் பயணம்; ஆடி ... ஸ்ரீரங்கம் கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகம்; தங்க குடத்தில் புனித காவிரி நீர் ஸ்ரீரங்கம் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ஆடி முதல் வெள்ளி; அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2025
10:07

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.


ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி கமாட்சி அம்மன், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில்களில் அதிகாலை 2 மணி முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு , அம்மனுக்கு சிறப்பு அபஷேகம்,பூஜைகள் செய்யப்பட்டு, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை முதல் பெண் பக்தர்கள் அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி , வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இளையான்குடி வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில் ,காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜைகள் நடந்தன. பெண்கள் நெய் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். மடப்புரம் காளி கோயிலில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதியது. அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றுவருகிறது.


ஆடி மாதம் முதல் வெள்ளிககிழமையை முன்னிட்டு கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் காளியம்மன் கோவிலில் அமைந்துள்ள மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  கே.கே. புதூர் தெரு எண் - 8 ல் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் மூலவர் அம்மன் வேப்பிலைகளுக்கு  நடுவே மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவை பெரிய கடை வீதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில், அவினாசி ரோட்டில் அமைந்துள்ள தண்டு மாரியம்மன் கோவில், காட்டூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் | விளையாட்டு மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar