விழுப்புரம் பெருமாள் கோவிலில் பகல்பத்து ஆறாம் நாள் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2012 11:12
விழுப்புரம்: விழுப்புரம் பெருமாள் கோவிலில் ஏகாதசி பகல் பத்து உற்சவம் நடந்தது. விழுப்புரம் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் ஏகாதசியையொட்டி, கடந்த 14ம் தேதி முதல் பகல்பத்து உற்சவம் நடந்து வருகிறது.இதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு துவங்கி, 9 மணி வரை சுவாமிக்கு திருமஞ்சனமும், பகல் 11 மணிக்கு உற்சவர் வைகுண்டவாசப் பெருமாள், அலங்காரத்துடனும் உட்பிரகாரத்தில் ஊர்வலம் வந்து காட்சியளித்து வருகிறார்.ஆறாம் நாள் உற்சவமான நேற்று காலை 7 மணிக்கு திருமஞ்சனமும், பகல் 11 மணிக்கு, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். வரும் 23ம் தேதி சிறப்பு உற்சவத்தின்போது, காலை 8 மணிக்கு அபிஷேக ஆராதனையும், பகல் 11 மணிக்கு மேல் மோகன அவதாரத்தில் பெருமாள் வலம் வந்து காட்சியளிக்கிறார்.