Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாஷ்யம் நகர் முருகன் கோவிலில் 25ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா தொடக்கம்; அமைச்சர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
கங்கைகொண்டசோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழா தொடக்கம்; அமைச்சர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2025
05:07

அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் திருவாதிரை விழா இன்று தொடங்கியது. பிரகதீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


அரியலுார் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜசோழன் மகன் ராஜேந்திரசோழனால் கங்கைநதி வரை போராடி வெற்றி பெற்ற சின்னமாக கட்டப்பட்டது. இக்கோயில் உலக பிரசித்திபெற்றது. திருவாதிரை விழாவுக்கு அரியலூர் கலெக்டர் ரத்தினசாமி தலைமை வகித்தார்.


விழாவில், நிதி மற்றும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது; 2021ம் ஆண்டு முதல் ஆடி திருவாதிரை விழா அவன் பிறந்த நாள் தான் நாம் கொண்டாட வேண்டிய திருநாள் என்று அதை அரசு விழாவாக அறிவித்த பெருமை தமிழக முதல்வரை சேரும். குடவாயில் பாலசுப்பிரமணியம் நீண்ட ஆய்வுக்கு பிறகு திருவாரூர் கல்வெட்டைப் படித்துவிட்டு மிகச் சரியாகச் சொன்னார் ராஜேந்திரன் பிறந்தது மார்கழித் திருவாதிரை அல்ல அது ஆடி திருவாதிரை என்று ஆடி திருவாரூரில் பிறந்த நட்சத்திரத்தை வைத்து இந்த நாளை கொண்டாட வேண்டும் என்ற அந்த சரியான கால கணக்கீட்டை உருவாக்கித் தந்தார். சுமார் 5000 வருடங்களுக்கு முன்பாகவே இரும்பின் பயன்பாட்டை கண்டறிந்த ஒரு இனம் இருக்கிறது என்று சொன்னால் அது தமிழ் இனம் என்பதை நாம் பெருமையாக சொல்ல முடியும் எனவே தமிழனுடைய வரலாற்று பெருமைகளை உருவாக்கக் கூடிய வகையில் இங்கே அகழாய்வுகளை முதல்வர் நடத்துவதற்கு உத்தரவிட்டார். மேலும், அகழாய்வு பணிகளில் கிடைக்கப்பெற்றுள்ள பொருட்களை காட்சிப்படுத்துவதற்காக முதல்வர் 22 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் சோழகங்கம் ஏரியினுடைய மேம்பாட்டுக்காக 12 கோடி ரூபாய் என்று இவ்வளவு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். தமிழருடைய நாகரீகத்தை பெருமையை தூக்கி பிடிக்க கூடிய வகையில் மாமன்னன் ராஜேந்திரன் உருவாக்கி தந்திருக்கக்கூடிய இந்த வெற்றியினுடைய பெருமையும் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் மட்டுமல்ல உலகமெங்கும் பரவி ராஜேந்திரனுடைய ஆட்சியும் பெருமையும் நமக்கெல்லாம் பாடமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் சிவசங்கர் ராஜேந்திரன் சாமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அடுத்துள்ள மருதூர் அனுமந்தராய சுவாமி திருக்கோவிலில் ஆடி மாதம் ஆறாம் நாளில் ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar