பெண்ணாடம் எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2025 03:07
பெண்ணாடம்; பெண்ணாடம் எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்ணாடம், கிழக்கு வாள்பட்டறை எல்லையம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி இன்று காலை அம்மனுக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு வளையல் அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பிரசாதமாக வழங்கப்பட்ட வளையல்களை சுமங்கலி பெண்கள் அணிந்து, அம்மனை தரிசனம் செய்தனர் கோவில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மகாதேவி உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.