Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ... பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் சத்ரு சம்ஹார யாகம் பொன்மலை வேலாயுத சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நீலகிரி ஹரிக்கட்டு தானிய திருவிழா பரவசம் அடைந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
நீலகிரி ஹரிக்கட்டு தானிய திருவிழா பரவசம் அடைந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2025
01:07

கோத்தகிரி; நீலகிரி மாவட்டத்தில் ஹிரோடைய்யா திருவிழாவை ஒட்டி, ஹரிக்கட்டு எனப்படும் தானிய திருவிழா, இன்று பரவசத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


நீலகிரி மாவட்டத்தில் வாழும் வடுக சமுதாய மக்களில் குலதெய்வமான ஹிரியோடைய்யா திருவிழா நேற்று நடந்தது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடை திறக்கப்படும் வனக்கோவிலில், முதல் கன்று குட்டி ஈன்ற பசும்பால் கொண்டு, ஐயனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவில் ஒரு நிகழ்வாக, இன்று ஹரி கட்டு என்ற தானிய திருவிழா நடந்தது. வனப்பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட மூங்கில் தழைகளை கயிராக நெய்து, கோதுமை தினையினை கோர்த்து, ஹக்க பக்க கோவிலில் கட்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இப்பூஜை செய்வதால், விவசாய பயிர்கள் செழித்து, ஆண்டு முழுவதும் மக்களுக்கு உணவு பஞ்சம் இருக்காது என்பது, ஐதீகமாக உள்ளது. தொடர்ந்து, கிராம கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கல் தூணில், எள் மற்றும் பருத்திக் கொண்டு, நெய் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான, பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி, ஐயனை பரவசத்துடன் வழிபட்டனர்.


மண்டெ தண்டு : கோத்தகிரி பொரங்காடு சீமைக்கு உட்பட்ட . தாந்தநாடு தொட்டூரில், மண்டெதண்டு விழா சிறப்பாக நடந்தது. மாவட்டத்தில் உள்ள வெளி ஊர்களில் இருந்து, தாந்தநாடு கொட்டூருக்கு திருமணமாகி, முதல் ஆண் குழந்தை பெற்றெடுக்கும் பெண்கள் பெண்கள், கலாச்சார உடையுடன், பழங்கால ஆபரணங்களை அணிந்து, குழந்தையுடன் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொன்று தொட்டு நடந்து வரும் இவ்விழால், உறவினர்கள் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஹிரியோடைய்யா விழா நடைபெறும் கடநாடு, ஒன்னதலை, கக்குச்சி மற்றும் பனஹட்டி உள்ளிட்ட கிராமங்களில், பஜனை மற்றும் ஆடல் பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar