கூடலழகிய பெருமாள் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2025 01:08
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்தின் நலனுக்காக விரதம் இருந்து வரலட்சுமி பூஜை நடத்துவார்கள். வரலட்சுமி விரதத்தின் போது லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம் செல்வத்தையும் செழிப்பையும் பெறுவார்கள் என்பதால், பெண்கள் அதிக அளவில் பூஜையில் கலந்து கொள்வார்கள். கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் வரலட்சுமி சிறப்பு பூஜையை முன்னிட்டு மகாலட்சுமி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல் வழங்கப்பட்டது. பொங்கல், பழச்சாறு பிரசாதமாக வழங்கப்பட்டது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், பால சித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன், சுந்தரவேலவர் கோயிலில் உள்ள மகாலட்சுமி அம்மன், வடக்கு காளியம்மன் கோயில், துர்க்கை அம்மன் கோயில், செல்வ காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.