ஞான ஈஸ்வரர் கோவிலில் வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2025 10:08
கோவை, சாய்பாபா காலனி, சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராகி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சி நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.