Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் ... ஆவுடையார்கோவில் அருகே ஆயிரம் ஆண்டு பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு ஆவுடையார்கோவில் அருகே ஆயிரம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோவிலில் ஒரே நாளில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்; நள்ளிரவு வரை அனுமதி
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோவிலில் ஒரே நாளில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்; நள்ளிரவு வரை அனுமதி

பதிவு செய்த நாள்

18 ஆக
2025
10:08

துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நள்ளிரவு வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர்.


தொடர் விடுமுறை, ஆடி கிருத்திகை, கிருஷ்ணஜெயந்தி என ஒரு சேர வந்ததால் நேற்று முன்தினம் திருச்செந்துார் திருவிழா கோலம் பூண்டது. வழக்கமாக திருச்செந்துார் முருகன் கோவிலில், இரவு 8:00 மணிக்கு கோவிலில் நடை சாத்தப்படுவது உண்டு. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், நேற்று முன்தினம் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை இலவச வரிசையாக மாற்றப்பட்டது. பக்தர்கள் அனைவரும் நள்ளிரவு, 1:30 மணி வரை முருகனை தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான நேற்றும், 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை ரத்து செய்யப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘திருச்செந்துார் வந்துவிட்டு முருகனை தரிசிக்க முடிவில்லை என, பக்தர்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்புவதாக புகார் எழுந்தது. அதற்காக பக்தர்கள் அனைவரும் முழுமையாக தரிசனம் செய்துவிட்டு செல்ல, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஒரு லட்சத்து 20,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர்’ என்றனர். இதற்கிடையே, விழா நேரங்களில் கூட்டத்தை கண்காணிக்கவும், அசம்பாவிதம் செய்யும் நபர்களை கண்டறியவும் ட்ரோன் கண்காணிப்பு குழு துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் குழு செயல்பாட்டை துவக்கி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; உலகப் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட ... மேலும்
 
temple news
கோவை; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ஆவணி முதல் சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar