Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் ... ஆவுடையார்கோவில் அருகே ஆயிரம் ஆண்டு பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு ஆவுடையார்கோவில் அருகே ஆயிரம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துார் கோவிலில் ஒரே நாளில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்; நள்ளிரவு வரை அனுமதி
எழுத்தின் அளவு:
திருச்செந்துார் கோவிலில் ஒரே நாளில் 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம்; நள்ளிரவு வரை அனுமதி

பதிவு செய்த நாள்

18 ஆக
2025
10:08

துாத்துக்குடி; திருச்செந்துார் முருகன் கோவிலில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 1.20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நள்ளிரவு வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால் பக்தர்கள் உற்சாகமடைந்தனர்.


தொடர் விடுமுறை, ஆடி கிருத்திகை, கிருஷ்ணஜெயந்தி என ஒரு சேர வந்ததால் நேற்று முன்தினம் திருச்செந்துார் திருவிழா கோலம் பூண்டது. வழக்கமாக திருச்செந்துார் முருகன் கோவிலில், இரவு 8:00 மணிக்கு கோவிலில் நடை சாத்தப்படுவது உண்டு. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், நேற்று முன்தினம் தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக, 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை இலவச வரிசையாக மாற்றப்பட்டது. பக்தர்கள் அனைவரும் நள்ளிரவு, 1:30 மணி வரை முருகனை தரிசனம் செய்தனர். விடுமுறை நாளான நேற்றும், 100 ரூபாய் கட்டண தரிசன வரிசை ரத்து செய்யப்பட்டது. கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘திருச்செந்துார் வந்துவிட்டு முருகனை தரிசிக்க முடிவில்லை என, பக்தர்கள் சிலர் ஏமாற்றத்துடன் திரும்புவதாக புகார் எழுந்தது. அதற்காக பக்தர்கள் அனைவரும் முழுமையாக தரிசனம் செய்துவிட்டு செல்ல, சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஒரு லட்சத்து 20,000 பக்தர்கள் தரிசனம் செய்தனர்’ என்றனர். இதற்கிடையே, விழா நேரங்களில் கூட்டத்தை கண்காணிக்கவும், அசம்பாவிதம் செய்யும் நபர்களை கண்டறியவும் ட்ரோன் கண்காணிப்பு குழு துவங்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் குழு செயல்பாட்டை துவக்கி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி அம்மன் கோவிலில் நத்தம் சிவனடியார்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar