Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கோவிலில் ஒரே நாளில் ... அன்னூர் மன்னீஸ்வரருக்கு ஆவணி முதல் சோமவார சிறப்பு அபிஷேகம் அன்னூர் மன்னீஸ்வரருக்கு ஆவணி முதல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவுடையார்கோவில் அருகே ஆயிரம் ஆண்டு பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
ஆவுடையார்கோவில் அருகே ஆயிரம் ஆண்டு பழமையான மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

18 ஆக
2025
10:08

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, ஆயிரம் ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பத்தை, அந்த மாவட்ட தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கண்டெடுத்து உள்ளனர்.


இதுகுறித்து, அதன் நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலுக்கு வடக்கே 7 கி.மீ., தொலைவில் உள்ள வெள்ளாளவயல் என்ற ஊரில், கருவேலங்காட்டை ஆய்வு செய்த போது, 1,000 ஆண்டுகள் பழமையான மகாவீரர் சிற்பம் இருந்ததை கண்டறிந்தோம். இந்த சிற்பம், 9 – 10ம் நுாற்றாண்டை சேர்ந்த, சிற்ப அடையாளங்களுடன், 124 செ.மீ., உயரம்; 72 செ.மீ., அகலம் உள்ளது. வலது, இடது, பின் பக்கங்களில், ஒவ்வொன்றாக மூன்று சிம்ம யாளி சுமந்த, இணையரி ஆசனத்தில், மகாவீரர் அமர்ந்துள்ளார். அவரின் இரு புறமும், இயக்கண் மாதங்கன், இயக்கி சித்தாயிகா, சன்ன வீரம் பூண்டு கவரி வீசுகின்றனர். முக்காலத்தையும் உணர்த்தும், குடை மற்றும் சுருள் சுருளாக மலர்களுடைய, அசோக மரத்தின் கீழ், மகாவீரர் சாந்தமான முகத்துடனும், ஞான வடிவுடனும், தியான நிலையில் அமர்ந்துள்ளார். அவரது தலைக்கு மேல், ஒளி வட்டத்துடன் பிரபை வளையம் உள்ளது. ஆவுடையார் கோயிலில், மாணிக்கவாசகர் வரலாறு, சமணர்கள் கழுவேற்றப்பட்ட ஓவியங்கள் உள்ளன. தற்போது, கோவிலுக்கு அருகிலேயே மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது, அதற்கு வலு சேர்க்கிறது. ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில், சிறுகானுார், வெள்ளாளக்கோட்டையூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில், சமண சின்னங்களும், சிற்பங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.  – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar