மானாமதுரை அருகே கீழமேல்குடி கிராமத்தில் உள்ள வழக்குடைய அய்யனார், சோனையா சுவாமி கோயிலில் கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடைபெற்று நிலையில் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் 20 ம் தேதி கும்பாபிஷேக விழாவிற்காக காப்பு கட்டி, முகூர்த்தகால் நடப்பட்டு, யாகசாலைகள் அமைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து கடந்த 2ம் தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகி விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, ரக்க்ஷா பந்தனம்,நாடி சந்தனம் உள்ளிட்ட 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை 9:00 மணிக்கு பூர்ணாகுதி முடிந்ததும் சிவாச்சாரியார் ராஜேஷ் தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை கோபுரத்திற்கு கொண்டு சென்று கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.பின்னர் வழக்குடைய அய்யனார், சோனையா சுவாமிகளுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்றது.கோயில் முன்பாக அன்னதானமும்,இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கீழமேல்குடி கிராம மக்கள் மற்றும் கோயில் குடிமக்கள் செய்திருந்தனர்.