பதிவு செய்த நாள்
25
டிச
2012
11:12
தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட நவதிருப்பதிகளில், நேற்று, வைகுண்ட ஏகாதசி திருவிழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இங்கு, ஸ்ரீவைகுண்டம், நத்தம், திருப்புளியங்குடி, பெருங்குளம்,தென்திருப்பேரை, இரட்டை திருப்பதி(இரு கோயில்கள்) , திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய ஊர்களில் அமைந்துள்ள, ஒன்பது பெருமாள் கோயில்கள், நவதிருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோயில்களில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, சிறப்பு பூஜைகளுக்குப்பின், சுவாமி - தாயார்களுடன் அருள்பாலித்தார். பக்தர்கள் ஒவ்வொரு கோயிலாக சென்று, நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.