Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியஅரவங்குறிச்சியில் புரவி ... நவராத்திரி துவக்கம்.. ஒன்பது நாள் அம்மன் அலங்காரமும்.. வழிபாட்டு முறையும்! நவராத்திரி துவக்கம்.. ஒன்பது நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சியில் ஆன்மிக சுற்றுலா மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்
எழுத்தின் அளவு:
காஞ்சியில் ஆன்மிக சுற்றுலா மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம்

பதிவு செய்த நாள்

21 செப்
2025
01:09

காஞ்சிபுரம்: ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், மூத்த குடிமக்களை, வைணவ கோவில்களுக்கு இலவசமாக அழைத்து செல்லும் ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா பேருந்தை காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.


ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், முக்கிய வைணவ கோவில்களுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், 60 – 70 வயதிற்கு உட்பட்ட 1,000 மூத்த குடிமக்களை இலவசமாக உணவு உட்பட ஆன்மிக பயணத்திற்கு அழைத்துச் செல்லும் திட்டம், கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டது.


அதன்படி, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று, காஞ்சிபுரத்தில் வைணவ கோவில்களுக்கான ஒருநாள் ஆன்மிக பயணம் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் துவங்கியது.


இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மூத்த குடிமக்கள் 50 பேருக்கு குடிநீர், உணவு, சுவாமி படம், கோவில் பிரசாதங்கள் அடங்கிய மஞ்சள்பை தொகுப்பை காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி வழங்கினார். ஆன்மிக சுற்றுலா பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.


இதில், காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், பாண்டவ துாதப்பெருமாள் கோவில், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் என, ஐந்து வைணவ கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.


இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை, துணை ஆணையர் ஜெயா, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையர் ராஜலட்சுமி, வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், ஹிந்து சமய அறநிலையத் துறை காஞ்சிபுரம் சரக ஆய்வாளர் அலமேலு உட்பட பலர் பங்கேற்றனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் பூஜைக‌ள் செ‌ய்து வ‌ழிபடுவது வழ‌க்க‌ம். ஒரு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,30)காலை மலையப்பசாமி சூரிய பிரபை ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஐப்பசி மாத திருவிழாவில் அக்.20 தீபாவளியன்று அம்மனுக்கு வைர கிரீடம், ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவில்களில், துர்காஷ்டமி ... மேலும்
 
temple news
சேலையூர்; ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹாசுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடந்து வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar