Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி ராஜகுபேரர் சுவாமிக்கு ரூபாய் ... மக்கள் நலன் வேண்டி எல்லை கருப்பராயன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு மக்கள் நலன் வேண்டி எல்லை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரட்டாசி பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்
எழுத்தின் அளவு:
புரட்டாசி பவுர்ணமி; திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

பதிவு செய்த நாள்

07 அக்
2025
10:10

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று,  6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டனர். பக்தர்கள் கூட்டத்தால், திருவண்ணாமலை மிதந்தது. 


திருவண்ணாமலையிலுள்ள, 2,668 அடி உயர அண்ணாமலையால் மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனர். இதனால் மாதந்தோறும் பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., சுற்றளவு உள்ள மலையை கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இதில்,  புரட்டாசி மாத பவுர்ணமி திதி நேற்று காலை, 11:43 மணி முதல் இன்று, 7ம் தேதி காலை, 9:50 மணி வரை உள்ளது. இதனால், நேற்று காலை முதலே பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல துவங்கினர். பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் பாதுகாப்பு பணிக்காக, 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். பக்தர்கள் கோவிலில், 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.  மேலும், கிரிவல பாதை முழுவதும், பக்தர்களுக்கு அன்னதானம், மோர், பழரசம் உள்ளிட்ட பல்வேறு குளிர்பானங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.  திருவண்ணாமலை நகருக்குள் கார், வேன், மற்றும் கனரக வாகனங்கள் நுழைய, நேற்றும், இன்றும், 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar