Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவிலில் ... 25ஆண்டுகளாக வடலுார் தைப்பூசத்திற்கு அரிசி, காய்கறி கொடுக்கும் முஸ்லிம் 25ஆண்டுகளாக வடலுார் தைப்பூசத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெற்குணத்தில் பழமையான கோவிலில் கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
நெற்குணத்தில் பழமையான கோவிலில் கொற்றவை சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

17 அக்
2025
05:10

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அருகே கோவில் புனரமைப்பு பணின்போதா 11ம் நூற்றாண்டை சேர்ந்த கொற்றவை சிலை கண்டுபிடிக்கப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த நெற்குணம் கிராமத்தில், திருப்பனிந்துறை நாயனார் கோவில் உள்ளது. தென்பெண்ணை நதிக்கரையோரம் அமைந்திருக்கும் இக்கோவில் மிகவும் பழமையானது. வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் கோவில் சிதிலமடைந்து பல ஆண்டுகளாக மண் முடி இருந்தது. இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவிலை புனரமைக்கும் பணி சமீபத்தில் துவங்கப்பட்டது. இதற்காக மண் குவியியல் மற்றும் எஞ்சிய கல் கட்டிடங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது கொற்றவை (துர்க்கை) புடைப்புச் சிற்பம் கண்டறியப்பட்டது. இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன், விழுப்புரம் கல்வெட்டு ஆய்வாளர் வீரராகவன், கல்வெட்டு ஆர்வலர்கள் கார்த்திகேயன், அன்பழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.


இது குறித்து உதியன் கூறியதாவது. 11ம் நூற்றாண்டை சேர்ந்த எண்தோளி என்று அழைக்கப்படும் கொற்றவை (துர்க்கை) சிற்பமாகும். சோழர்கால புடைப்பு சிற்பம். 48 அங்குல உயரம், 27 அங்குல அகலம் கொண்ட நீள் கோள பலகை கல்லில் எட்டு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. தலையில் கண்ணி மாலையுடன் கூடிய கரண்ட மகுடம் தாங்கியும், இரண்டு செவிகளில் குழைகளும், கழுத்தை சவடியும் (அட்டிகை) முத்து மணி ஆரமும் அணி செய்கிறது. மார்பில் கச்சையும், இடை முதல் தொடை வரை அரையாடை அழகிய முடிச்சுகளான சுங்குகளுடன் அணிந்துள்ளாள். அருள் சுரக்கும் கண்களுடன், எட்டு கரங்களில் காட்சியளிக்கிறாள். நடுநாட்டில் இவ்வகை போர் தெய்வமான கொற்றவை நடுக்கல் அதிகமாக உள்ளது. இவ்வாறு கூறினார் உதியன்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar