Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெற்குணத்தில் பழமையான கோவிலில் ... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தருமபுரம் ஆதீனம் ஆயுள் ஹோமம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
25ஆண்டுகளாக வடலுார் தைப்பூசத்திற்கு அரிசி, காய்கறி கொடுக்கும் முஸ்லிம்
எழுத்தின் அளவு:
25ஆண்டுகளாக வடலுார் தைப்பூசத்திற்கு அரிசி, காய்கறி கொடுக்கும் முஸ்லிம்

பதிவு செய்த நாள்

17 அக்
2025
05:10

கடலுார்: வடலுாரில் நடைபெறும் தைப்பூச அன்னதானத்திற்கு கடந்த 25 ஆண்டுகளாக அரிசி, காய்கறி வாங்கி கொடுக்கும் இஸ்லாமியரின் செயல் பாராட்டுக்குறியது.


கடலுார் லாரன்ஸ் ரோடு சிக்னல் அருகே எஸ்.கே.பி.,காய்கறி கடையை நடத்தி வருபவர் பக்கீரான். இவர் சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் கடந்த 25ஆண்டுகளுக்கும் மேலாக வடலுார் வள்ளலார் சத்தியஞானசபையில் நடக்கும் தைப்பூச அன்னதாக விழாவிற்கு அரிசி, காய்கறிகளை தொடர்ந்து அனுப்பி வருகிறார். இதுகுறித்து பக்கீரான் கூறும் போது, ‘‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற மகத்தான கோட்பாட்டை உலகுக்கு உரைத்தவர் வள்ளலார். சிறுவயதில் இருந்தே வள்ளலாரின் கோட்பாடுகள் மீது ஈர்ப்பு உண்டு.


வடலுாரைச் சேர்ந்த சிவப்பெருமாள் என்ற எனது நண்பர் நான் கஷ்டத்தில் இருந்த போதே, தைப்பூச அன்னதானத்திற்கு உதவி செய், கஷ்டங்கள் தீரும் என்றார்.  20வருடங்களுக்கு முன்பு ஐந்து மூட்டை அரிசி வாங்கிக்கொடுத்தேன். அடுத்த வருடம் 10 மூட்டை அரிசி வாங்கிக் கொடுத்தேன். இதுபோல் தொடர்ந்து உதவி செய்துகொண்டிருந்த போது, நான் காய்கறி கடை வைத்திருப்பதை அறிந்து காய்கறிகள் கிடைப்பது சிரமமாக உள்ளது என்றனர். அதைத்தொடர்ந்து காய்கறிகளும் அனுப்பி வருகிறேன். கடந்த ஆண்டு 20டன் காய்கறிகள், 100மூட்டை அரிசி, 5ஆயிரம் பாட்டில் குடிநீர் அனுப்பி வைத்தோம். பசித்தவனுக்கு சோறு போடுவது மிகப்பெரிய தொண்டு. மனிதநேய அடிப்படையிலான இந்த தொண்டிற்கு எங்களால் இயன்ற உதவியைச் செய்து வருகிறோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 
temple news
நத்தம்: சிவன் கோயில்களில் நடந்த சனி பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar