சாய் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2025 10:12
விழுப்புரம்: மாம்பழப்பட்டு கிராமத்தில் உள்ள சாய் கங்காதீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழுப்புரம் அடுத்த மாம்பழப்பட்டு கிராமத்தில் கங்கையம்மன் உடனுறை சாய் காங்காதீஸ்வரர் கோவில் உள்ளது.
கோவிலில், நேற்று மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு கலச ஆராதனை, கோ பூஜை, மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம் நடந்தது.
தொடர்ந்து 5:30 மணி க்கு பூர்ணாஹூதி, தீபாராதனை, 6:00 மணிக்கு கடம் புறப்பாடு, யாத்ரதானம், 6:15 மணிக்கு விமானம் மற்றும் சுவாமி கும்பாபிஷேகம், பின் அலங்காரம் மகா மங்கயா ஆரத்தி நடந்தது.
கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்தனர்.