Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கூட நன்னீராட்டு விழா இறைவன் திருநாமம் உச்சரிப்பே மோட்சம் பெறுவதற்கான வழி; சிருங்கேரி சுவாமிகள் இறைவன் திருநாமம் உச்சரிப்பே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உசிலம்பட்டி: கோயில்களில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
உசிலம்பட்டி: கோயில்களில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

01 டிச
2025
10:12

உசிலம்பட்டி: உசிலம்பட்டி, அலங்காநல்லுார், மேலுாரில் நடந்த கும்பாபிஷேகங்களில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


உசிலம்பட்டி, வகுரணி ஊராட்சி சந்தைப்பட்டி கிராமத்தில் சந்தனமாரியம்மன் கோயில் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜைகள், இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜைகளுடன் நேற்று காலை கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்தனர்.


தொடர்ந்து அம்மனுக்கு மகா அபிஷேகம், மகாதீபாராதனை வழிபாடுகள் நடத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


அலங்காநல்லுார் மதுரை பொதும்பு வாசன் நகரில் அபிராமி தாயார், அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நவக்கிரகம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடந்தது. நவ.29ல் முதல் கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை லட்சுமி பூஜை, காளை, குதிரைக்கு மரியாதை செய்து அஸ்வமேத யாகம் நடந்தது. 2ம்கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. குன்றின் மேல் பிரதிஷ்டை செய்த செந்திலாண்டவர் வேல், மயில், சேவலுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை இறை ஊழிய மகளிர் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


மேலுார் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நவ.27 முதல் யாகசாலை பூஜை துவங்கியது. நான்காம் கால யாகசாலை பூஜை முடிவில் சிவாச்சாரியார் கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், - கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மலைப்பகுதியில் மழை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் செம்பை சங்கீத உற்ஸவம் நடந்தது.குருவாயூர் ... மேலும்
 
temple news
‘‘இறைவன் திருநாமங்களை உச்சரிப்பதே மோட்சத்துக்கான வழி,’’ என, சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar