திருப்போரூர்: இள்ளலுார் சுயம்பீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
திருப்போரூர் ஒன்றியம், இள்ளலுார் கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்பகாம்பாள் உடனுறை சுயம்பீஸ்வரர் கோவில் உள்ளது.
கோவில் திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
காலை 9:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு, விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.