Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தனி மனிதன் அமைதி அடைந்தால் உலகம் ... பழநி கோயிலில் 2 நாளில் 85 லட்ச ரூபாய் வசூல்! பழநி கோயிலில் 2 நாளில் 85 லட்ச ரூபாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகத்திலேயே முதல் முறையாக குண்டம் விழாவுக்கு ரூ.5 லட்சம் இன்சூரன்ஸ்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 ஜன
2013
10:01

கோபிசெட்டிபாளையம்: தமிழகத்திலேயே முதல்முறையாக, கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் விழாவுக்காக, 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. கோபி அருகே உள்ள பாரியூர், முற்காலத்தில் மிகப்பெரிய பட்டணமாக இருந்துள்ளது. 13ம் நூற்றாண்டில் நடந்த போரில், ஊர் சிதைந்ததாக வரலாறு கூறுகிறது. இங்குள்ள கொண்டத்து காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. காளியம்மன், அமர்ந்த நிலையில், எட்டு கைகளுடன், மகிஷாசுரனை வதம் செய்தவாறும், கோபம் தணிந்து சாந்த சொரூபியாகவும் அருள்பாலிக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ஆண்டுதோறும், ஜனவரியில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடக்கிறது. நடப்பாண்டு குண்டம் திருவிழா, டிசம்பர், 27ல் துவங்கியது. நாளை, தேர் வெள்ளோட்டமும்; 10ம் தேதி குண்டம் இறங்குதலும்; 11 தேதி மாலை, 4:00 மணிக்கு தேர்திருவிழாவும் நடக்கிறது. குண்டம் திருவிழாவில், பல்வேறு ஊர்களை சேர்ந்த, 50 ஆயிரம் பக்தர்கள் குண்டம் இறங்குவர். குண்டம் இறங்கும் பக்தர்கள், இரண்டு நாட்களுக்கு முன், கோவிலில் குவிந்து விடுவர். குண்டம் விழாவன்று, 2 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்று குண்டம் இறங்குவர். கோபி, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், 20 பேர் குண்டத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனால், பாரியூரில் குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு, ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அவர்களுக்கு நிதியுதவி செய்யும் வகையில், கொண்டத்து காளியம்மன் பெயரில்,கோவில் நிர்வாகம் சார்பில், 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்களில், தேர்களுக்கு மட்டுமே இதுவரை இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக, பாரியூர் குண்டம் திருவிழாவுக்கு, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: தான்தோன்றியம்மன் கோவில் சம்பவத்துக்கு பின், முதல் முறையாக பாரியூர் குண்டம் திருவிழாவுக்கு, அம்மன் பெயரில், 5 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டதால், இதில் இருந்து இன்சூரன்ஸ் தொகை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar