விழுப்புரம் தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2025 04:12
விழுப்புரம்: விழுப்புரம் வரசித்தி விநாயகர் கோவிலில், தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல அபிஷேகம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது. அதனையொட்டி, இன்று காலை 7:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடந்தது. 10:00 மணிக்கு ரயிலடி ராஜகணபதி கோவிலில் இருந்து திருஆபரண பெட்டி, பால்குடம் புறப்பாடு, பாலாபிஷேகம் மற்றும் மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதில், தர்மசாஸ்தா அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.