Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரியங்காவு தர்ம சாஸ்தா - புஷ்கலா தேவி ... திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

26 டிச
2025
12:12

உத்தரகோசமங்கை; ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவில் ஜன., 2ல் மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை 6:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா பிரசித்தி பெற்ற விழாவாகும். மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற சிவஸ்தலமான உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சுவாமி கோயில் உள்ளது. கோயிலின் வடக்கு பகுதியில் அபூர்வ பச்சை மரகதாரா மரகத நடராஜர் தனி சன்னதி உள்ளது. ஒளி, ஒலியால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனத்தால் காப்பிடப்பட்டு நடராஜ பெருமான் இருப்பார். ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனம் களையப்படும். இதனை முன்னிட்டு நேற்று மங்கள விநாயகர் கோயிலில் அனுக்ஞை மற்றும் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. மாணிக்கவாசகப் பெருமான், பஞ்சமூர்த்திகள் மற்றும் மரகத நடராஜ பெருமான் ஆகியோருக்கு காப்பு கட்டப்பட்டது.


வருகிற ஜன., 2 காலை 8:30 மணிக்கு நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று முழுவதும் தொடர்ந்து 32 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடக்கின்றன. அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள் மீண்டும் அபிஷேகம் தீபாராதனைகளுக்கு பின் திரையிடப்பட்டு புதியதாக மரகத நடராஜரின் திருமேனியில் சந்தனம் காப்பிடப்படும். இந்த அரிய விசேஷ தரிசனத்தை காண்பதற்காக பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர். மார்கழி ஆருத்ரா தரிசன விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar