Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்னூர் ஐயப்பன் கோவில் தேர் பவனி நாளை வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நாளை வைகுண்ட ஏகாதசி பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களக்காட்டூரில் புதிதாக கட்டப்பட்ட சிவாலயம் காஞ்சி விஜயேந்திரர் திறந்து வைத்து ஆசியுரை
எழுத்தின் அளவு:
களக்காட்டூரில் புதிதாக கட்டப்பட்ட சிவாலயம் காஞ்சி விஜயேந்திரர் திறந்து வைத்து ஆசியுரை

பதிவு செய்த நாள்

29 டிச
2025
12:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில் புதிதாக கட்டப்பட்ட, சிவாலயம் என அழைக்கப்படும் ஆன்மிக அருங்காட்சியகத்தை, காஞ்சி மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று திறந்து வைத்தார்.


காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலை களக்காட்டூரில், காஞ்சிபுரம் பிரம்மா குமாரிகள் அமைப்பு சார்பில், சிவாலயம் என அழைக்கப்படும் ஆன்மிக அருங்காட்சியம் இரண்டு அடுக்குகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இங்கு 12 ஜோதிர்லிங்கம், சகஸ்ரலிங்க கோடி லிங்கம், சொர்க்கத்தின் தத்ரூப காட்சி, ராஜயோக தியான படவிளக்க கண்காட்சி, ஒளி – ஒலி அலங்காரம், ராஜயோக தியான அறை, ஆன்மிக புத்தக கண்காட்சி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் பிரம்மா குமாரிகளின் வெள்ளி விழா நிகழ்ச்சியாக புதிய சிவாலயம் திறப்பு விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் பிரம்மா குமாரிகள் அமைப்பு பொறுப்பாளர் பி.அகிலா வரவேற்றார். உத்திரமேரூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., சுந்தர், தமிழ்நாடு, தென் கேரளம், புதுச்சேரி பிரம்மா குமாரிகள் சேவை ஒருங்கிணைப்பாளர் பீனா ஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிவாலயத்தை திறந்து வைத்து வழங்கிய ஆசியுரை: நல்ல சிந்தனை, உணவு, உடற்பயிற்சி, ஆசனங்கள், யோகாசனங்கள், இவை எல் லாம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகின்றன. மூலம் நட்சத்திரத்தில், நம் காஞ்சி பெரியவர் மவுன விரதம் மேற்கொள்வது வழக்கம். எந்த பெரிய வி.ஐ.பி., வந்தாலும்கூட, மூல நட்சத்திர தினத்தன்று அவர் மவுனத்தை விடமாட்டார். மூல நட்சத்திர தினத்தன்று நாம் ஐந்து - நிமிடமாவது மவுனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்கொடி, களக்காட்டூர் ஊராட்சி தலைவர் நளினி, துணைத் தலைவர் பாலாஜி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி சகிலா ராஜி, காலுார் ஊராட்சி தலைவர் சகுந்தலா உட்பட பலர் பங்கேற்றனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar