அந்தோணியார் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம், தீச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜன 2026 03:01
மயிலாடுதுறை: கஞ்சா நகரம் அந்தோணியார் ஆலயத்தில் அங்கப் பிரதட்சணம் செய்தும், தீச்சட்டி எடுத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சா நகரம் கிராமத்தில் பழமையான புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. 2026 புத்தாண்டு பிறப்பு தினமான இன்று நோய் தீர வேண்டியும், திருமணம், குழந்தை வரம் வேண்டியும், மதுபழக்கத்தில் இருந்து விடுபடவும், வாழ்வு செழிக்க வேண்டியும் அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள ஊர் பொது குளத்தில் பக்தர்கள் நீராடி அங்கிருந்து அங்கப் பிரதட்சணம் செய்தும், மண்டியிட்டு கையில் மெழுகுவர்த்தி, தீச்சட்டி ஏந்தியும் ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தனர். குழந்தை பேரு பெற்றவர்கள் குழந்தையை பச்சை ஓலையில் கிடத்தி கோயிலை சுற்றி இழுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தி வழிபாட்டனர். தொடர்ந்து அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது. கிறிஸ்தவர்களின் இந்த வழிபாட்டை அனைவரும் பக்திப் பரவசத்துடன் பார்த்தனர்