Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தீபத்துாணில் ... கோட்டை அழகிரிநாதர் கோவிலில் வேடுபறி உற்சவம் கோலாகலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் வேடுபறி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரகோட்டத்தில் கும்பாபிஷேகம் மார்ச் மாதத்தில் நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
குமரகோட்டத்தில் கும்பாபிஷேகம் மார்ச் மாதத்தில் நடத்த முடிவு

பதிவு செய்த நாள்

07 ஜன
2026
11:01

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் மார்ச் மாதத்தில் நடைபெறும். நாள் குறித்து முறையான அறிவிப்பு பின்னர் வெளியாகும் என, கோவில் செயல் அலுவலர் கேசவன் தெரிவித்தார்.


காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் கடைசியாக 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி நடந்தது. இந்நிலையில் கோவிலில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள், உட்பிரகார சன்னிதிகள் பொலிவிழந்த நிலையில் இருந்தன. இதையடுத்து ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், குமரகோட்டம் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திருப்பணி துவக்குவதற்கான பாலாலயம் கடந்த 2024ம் ஆண்டு பிப்., மாதம் 26ம் தேதி நடந்தது. இதையடுத்து உபயதா ரர் நிதியில் இருந்து, 66.48 லட்சம் ரூபாய் செலவில், திருப்பணிகள் துவக்கப்பட்டு, ராஜகோபுரம், ரிஷிகோபுரம், கந்தபுராண மண்டபம் உள்ளிட்ட 16 திருப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. இந்நிலையில், காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் கும்பாபிஷேகம் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளதாக சமூக வலைதளங் களில் பரவி வரும் தகவல் தவறானது என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


காஞ்சிபுரம் குமரகோட்டம் செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது: குமரகோட்டம் கோவில் கும்பாபிஷேகம் 8ம் தேதி நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் வரும் தகவல் தவறானது. கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. குமரகோட்டம் கோவிலில் நடந்து வரும் 16 திருப் பணிகளும் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. பிப்., மாதம் இறுதிக்குள் அனைத்து திருப்பணிகளும் முடிக்கப்பட்டு, மார்ச் மாதத்தில் எந்த நாளில், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பது குறித்து முறையான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: மார்கழி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரம் தொல்லியல் துறை வளாகத்தில் தனியார் நிர்வாக பராமரிப்பில் உள்ள, பல்லவர் காலத்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத தேய்பிறை சஷ்டி பூஜை விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; அன்னூர் அய்யப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலுார் மாயாண்டி சித்தர் கோயிலில் 19 ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.ஜன., 8 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar