Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இது பக்திக்கு மட்டுல்ல .. நெஞ்சை ... ஜன. 14ல் சபரிமலையில் மகரஜோதி! ஜன. 14ல் சபரிமலையில் மகரஜோதி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபடுவதில் வினோத முறை: குட்டி முட்டி படைத்தால் முட்டாது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

05 ஜன
2013
02:01

கருப்பணசாமிக்கு, நம்மூரில் பல  அவதாரம் உண்டு. வாகனங்களுக்கு பிரத்யோக கருப்பணசாமி திண்டுக்கல் அய்யலூரில் வீற்றிருக்கிறார். திருச்சி நான்குவழிச்சாலை, ரயில்பாதை அருகே அருள் புரியும் அவரை, வழிபடுவதிலும் வினோத முறை கடைபிடிக்கப்படுகிறது. வாகனத்திற்கு விபத்து விலக, புதிய வாகனம் வாங்க, வண்டிக்கருப்பணசாமியை வழிபடு கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். புதன், வெள்ளி, ஞாயிறு சென்றால், அங்கு  நடக்கும் கிடா விருந்துகள், அதற்கு சாட்சி.  கோயில் நிர்வாகத்தை தங்கம்மாபட்டியினரும், பூஜை வழிபாட்டை  குப்பாம்பட்டியினரும் தொடர்ந்து வருகின்றனர். 

வண்டிக்கருப்பணசாமி  எப்படி உருவானார்? விடை தருகிறார், தங்கம்மாபட்டி நேரு: கேரளாவைச் சேர்ந்த சிலர், மாட்டு வண்டியில் கருப்புச்சாமி சிலையுடன் திருச்சிக்கு  சென்றனர். இவ்வழியாக வந்த போது, வண்டி நகர முடியவில்லை. சிலையை கீழே இறக்கிய பிறகே, வண்டி நகர்ந்தது. அவர்கள் விட்டுச் சென்ற சிலையை, தங்கம்மாபட்டி கிராமத்தினர்,  பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.  கோரிக்கைகள் நிறைவேறும் போது, குட்டி, முட்டி படையல் (மண்பானையில், ஆட்டுக் குட்டி கறி சமைத்து) வைத்து, கருப்பனை  மகிழ்வித்தனர். ஆங்கிலேயர் காலத்தில்,  இவ்வழியே ரயில் போக்குவரத்து இயக்க சிரமப்பட்டனர்.  கிராமவாசிகள் ஆலோசனைப்படி, ஆடு வெட்டி பூஜை செய்த பிறகே, ரயில் போக்குவரத்தின் சிரமம் தீர்ந்தது. அதன்பின், கோயிலின் புகழ் பரவி, வண்டிக்கருப்பணசாமி என்ற, பெயர் ஏற்பட்டது, என்றார். தங்கம்மாபட்டி, முடக்குபட்டி, புதூர், பொட்டி நாயக்கன்பட்டி, கருஞ்சின்னானூர், செம்பன்பழனியூர், வால்பட்டி  கிராமத்தினர் ஒன்று கூடி, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை புரவி எடுப்பு நடத்துகின்றனர். குட்டி, முட்டி படைத்தால்,  வாகனம் முட்டாது (விபத்தாகாது) என்ற, இவர்களின் நம்பிக்கைக்கு, வழிவிடும் கருப்பணை, நாமும் வணங்குவோம்!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar