தேவகோட்டை; தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தை மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமி , அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. இதனைத் தொடர்ந்து மாலையில் மகளிர் நடத்திய திருவிளக்கு பூஜை நடத்தி அம்மனை வழிபட்டனர். தை வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி, அம்பாள் தரிசனம் செய்தனர்.