Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் ... திருவண்ணாமலையில் தரிசனத்திற்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்: விழிப்புணர்வு பேனர் திருவண்ணாமலையில் தரிசனத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் தீப விற்பனை, பக்தர்கள் சிரமம்
எழுத்தின் அளவு:
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் தீப விற்பனை, பக்தர்கள் சிரமம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2026
02:01

திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு விற்பனை செய்வதால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். வெள்ளி, செவ்வாய் , ஞாயிறு கிழமைகளில் இரு மடங்கு பக்தர்கள் வருவார்கள், ஆடி வெள்ளி போன்ற விசேச தினங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் வரும், கோயிலில் அம்மனுக்கு நெய் விளக்கு தீபம் ஏற்றி வழிபடுவார்கள், இதுதவிர அம்மனுக்கு தேங்காய், பழம், எலுமிச்சை மாலை அணிவித்தும் வேண்டுவார்கள், கோயிலின் கிழக்கு நுழைவு வாயில் வழியாகத் தான் பெரும்பாலான பக்தர்கள் வந்து செல்வார்கள், காதணி விழா, கிடா வெட்டு உள்ளிட்டவற்றிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள், கோயிலின் கிழக்கு நுழைவு வாயில் அருகே கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபட்ட பின் அப்படியே கோயிலினுள் வருவார்கள். நுழைவு வாயிலை மறித்து டேபிள் அமைத்து நெய் விளக்குகளை பரப்பி விற்பனை செய்கின்றனர். ஒருவர் மட்டுமே வந்து செல்லும் அளவிற்கே பாதை உள்ளது. இதனால் கூட்ட நெரிசலில் பக்தர்கள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். 


கூட்ட நெரிசலில் விளக்குகள் மீது கை பட்டு தவறி விழுந்தாலும் பக்தர்களை அவதூறாக பேசுகின்றனர். கோயிலில் நெய் விளக்கில் தீபம் ஏற்றிய பின் விளக்குகள் எடுத்து வந்து மீண்டும் விற்பனை செய்கின்றனர். பலமுறை பாதையை மறித்து விளக்குகள் விற்பனை செய்வது குறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மடப்புரம் கோயிலில் பாதையை மறித்து நெய் தீபம் விற்பனை செய்பவர்களை அப்புறப்படுத்தி பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இடைத்தரகர்களிடம் பணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar