காரைக்குடி: குன்றக்குடி சண்முக நாதப் பெருமான் கோயிலில் தைப் பூசத்தையொட்டி நேற்று மாலை தேரோட்டம் நடந்தது.
குன்றக்குடி சண்முக நாதப் பெருமான் கோயில் தைப்பூச விழாவை யொட்டி ஜன. 23ம் தேதி அனுக்ஞை பூஜை, விக்னேஸ்வர பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
விழா நாட்களில், தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சுவாமி வீதி உலா நடந்தது. நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இதில் காரைக்குடி, குன்றக்குடி, திருப்புத்துார் உட்பட பல்வேறு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.