கடலுார்: கடலுார் கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில், மத்வ சித்தாந்த சேவா சங்க பொன்விழா ஆண்டு சிறப்பு பூஜை நடந்தது.
கடலுார், கூத்தப்பாக்கம் ராகவேந்திரர் கோவிலில் மத்வ நவமி மகோற்சவம் மற்றும் மத்வ சித்தாந்த சேவா சங்க 50ம் பொன்விழா ஆண்டை முன்னிட்டு சுப்ரபாதம் நிர்மால்யம், மத்வ விஜய மஹாகாவ்ய மகா அகண்ட பாராயணம் நடந்தது.
மத்வரின் திருவுருவ படம் மாட வீதியுலா, பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விஜய விட்டல மகளிர் குழுவினர் கலந்து கொண்டு ஹரிநாம பஜனை நடத்தினர்.