கோவை: ஸ்ரீ தியாக பிரம்ம கானாஞ்சலி சார்பில், 72 ம் ஆண்டு தியாகராஜ உற்ஸவம் இசை நிகழ்ச்சி, ராம்நகர், கோதண்டராமர் கோவில் கடந்த 31 ம் தேதி துவங்கியது. நேற்று மாலை நடந்த உற்ஸவத்தில், ஜெயராஜ், ஜெய ஸ்ரீ வீணை, உமையாள்புரம் ஸ்ரீ மாலியின் மிருதங்கம், கோவை சுரேஷ் கடம் இசை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சி பார்வையாளர்களை கவர்ந்தது.