பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கொண்டைகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவிலில் ஆண்டுவிழா நடந்தது.
பொள்ளாச்சி, கொண்டைகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவிலில், நான்காம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு, 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் புனித தீர்த்தங்கள் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை பூஜை செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமியை வழிபட்டார்கள். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.