விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுார் ஸ்ரீபூமி, நீளா நாயகி சமேத வரதராஜபெருமாள் கோவிலில், நேற்று கும்பாபிஷே விழா நடந்தது.
விழாவையொட்டி, 6ம் தேதி காலை 6:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, யாக சாலை துவங்கி வாஸ்துபூஜை, வேத மந்திரங்கள் நடந்தது. 7ம் தேதி காலை 8:00 மணிக்கு காப்பு கட்டி முதல் கால யாகபூஜையும், பகல் 12:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை 7:00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, காலை 9:40 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், லட்சுமணன் எம்.எல்.ஏ., மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.