பழநி மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழா: கம்பம் சாட்டும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2026 05:02
பழநி; மாசித் திருவிழாவை முன்னிட்டு பழநி மாரியம்மன்கோயிலில் திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் மாசிதிருவிழா பிப். 6 இரவு முகூர்த்தக்கால் நடுதல் உடன் துவங்கியது. நேற்று (பிப். 10 ) திருக்கம்பத்திற்கு அரிவாள் எடுத்துக் கொடுத்தல், அலங்கரித்தல் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மாரியம்மன் கோயில் முன் கம்பம் சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து இரவு 11:00 மணிக்கு குமாரசத்திரம் அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம் அழகுநாச்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் பால்,மஞ்சள் நீரில் கம்பத்திற்கு அபிஷேகம் செய்தனர்.பிப். 17 இரவு 7:00 மணிக்கு கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல், பிப்.24 ல் அம்மனுக்கு திருக்கல்யாணம், பிப்.25ல் தேரோட்டம் நடக்கிறது.