மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2026 05:02
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி விருதுநகர் துணை ஆணையர் (பொறுப்பு) நாகராஜன் தலைமையில் நடந்தது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு 40 நாட்களுக்கு ஒரு முறை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். நேற்று காலை சிவகங்கை அறநிலையத்துறை உதவி ஆணையர் திவ்யபாரதி, மடப்புரம் உதவி ஆணையர் ஜென்னி, ஆய்வர் அய்யனார், கண்காணிப்பாளர் பாஸ்கரன், மதுரை அன்னபூரணி சேவா சங்கத்தினர், கோயில் ஊழியர்கள் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோயில் வளாகத்தில் அன்னதான உண்டியல் உட்பட பத்து உண்டியல்கள் திறக்கப்பட்ட பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 31 லட்சத்து 58 ஆயிரத்து 102 ரூபாய் ரொக்கமும், கோசாலை உண்டியலில் 69 ஆயிரத்து 981 ரூபாய் ரொக்கமும், 95.400 கிராம் தங்கம், 502 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.