திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு 15ம் தேதி வாகனங்கள் செல்ல தடை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2026 12:02
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு வரும் 15ம் தேதி வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். வரும் 15ம் தேதி அரசு விடுமுறை மற்றும் திருமண முகூர்த்த நாள் என்பதால் மலைக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசிக்க வருவார்கள். வரும், 15ம் தேதி மலைபாதையில் ஆட்டோ, வேன், பேருந்து போன்ற வாகனங்கள் செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைக்கோவில் படாசெட்டி குளத்தில் இடவசதி ஏற்ப கார்கள் மட்டும் மலைப்பாதையில் செல்வதற்கு அனுமதிக்கப்படும். இருசக்கர வாகனங்கள் செல்வதற்கும் அனுமதி உண்டு. பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு வசதியாக கோவில் நிர்வாகம் சார்பில், 10 பேருந்துகள் இலவசமாக இயக்கப்படும் என, திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.